தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

மனிதனின் மரணத்தின் பின் என்ன நடக்கும் என்பதைக்குறித்து பல கருத்துக்கள் இருக்கிறது. சிலர் மரணத்துக்குப்பின் எல்லாம் முடிந்ததென்று நினைக்கிறார்கள். சிலர் எல்லா மனிதர்களும் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்று கூறுகிறார்கள். மற்றவர்கள் நம்முடைய ஆத்துமாவைக் கழுவிச் சொர்க்கத்துக்குத் தயார்ப்படுத்துகின்ற ஓரு இடம் இருப்பதை நம்புகிறார்கள். ஆனால் இந்தக் கருத்துக்களை குறித்து வேதம் எதுவும் கூறவில்லை.

கடவுளின் வார்த்தைகள் சரியாகவும் தெளிவாகவும் இருக்கிறது.

அன்றியும், ஓரேதரம் மரிப்பதும், பின்பு நியாத்தீர்ப்பு அடைவதும், மனுஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே. (எபிரெயர் 9:27)  கடவுளோடு உறவில் இருக்கிற ஓவ்வொருவரும் சொர்க்கத்தில் ஓரு நித்திய வாழ்க்கையை கடவுளோடு வாழப்போகிறார்கள். கடவுளுடைய உறவில் இல்லாதவர்களுக்கு ஓரு வேறு நித்திய இடம் காத்திருக்கிறது. அவர்கள் கர்த்தருடைய சந்நிதிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (2. தெசலோனிக்கேயர் 1:10)  அந்த இடத்தை வேதம் நரகம் என்று கூறுகிறது.

Lektion7 Feuerநரகம் உண்மையானது.

நரகம் மனிதர்களின் ஓரு கண்டுபிடிப்பு அல்ல. வேதம் சொர்க்த்தைப்பற்றியும் நரகத்தைப்பற்றியும் பல தடவைகள் கூறுகின்றது. இயேசு அந்தக் காலத்தில் இருந்த பயபக்கியுள்ள மனிதர்களிடம் இவ்வகையாகக் கேட்டார்: நரககாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? (மத்தேயு 23:33)  இயேசு இந்தக்கேள்வியை பல முறை கேட்டார். நீங்கள் இன்னாருக்குப்பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன். கொலை செய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள். ஆம் அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்கா 12:5)

நரகம் பயங்கரமானது.

நரகத்தைக் குறித்துப் பல படங்கள் இருக்கிறது. நாம் காணும் படங்களில் ஓரே இடத்தைக் காண்பிக்கிறது. குறிப்பாக அந்தப் படங்கள் இருளையும் நெருப்பையும் பெரிதாகக் காண்பிக்கிறது. அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். (மத்தேயு 13:42)  இந்தக் கடுமையான வார்த்தைகள் உண்மையாயிருக்கிறது. அங்கிருக்கிற மனிதர்கள் கடவுளின் சாபத்திற்குள்ளானவர்கள். அங்கு நல்லதென்று ஓன்றுமில்லை மற்றும் இளைப்பாறுதலும் அங்கு இல்லை.

நரகம் நித்தியமானது.

நரகத்திலிருந்து ஓருவரும் வெளியே செல்ல முடியாது. அது என்னத்தைக் கூறுகிறதென்றால் மனிதனின் சாவுக்குப்பிறகு இவனால் நரகத்திலிருந்து சொர்க்கத்துக்குப் போகமுடியாது. அதுவுமல்லாமல், இவ்விடத்தில் இருந்து உங்களித்திற்கு கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்கு கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குள்ளும் கூடாதபடிக்கு எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறதென்று என்றான். (லூக்கா 16:20)  அங்கு அனுபவிக்கப்போகிற கொடுமை தனிமையும் வேதனையும் மனிதனை மாற்ற அல்ல ஆனால் அவனைத் தண்டிக்கும்.

நரகம் நம்மால் தெரிந்து கொள்ளப்பட்ட இடம்.

உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினை நாளிலே உனக்காக கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளகிறாயே. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலன் அளிப்பார். (ரோமர் 2:5-.6)  நரகத்துக்கும் சொர்கத்துக்கும் போகிற முடிவு மனிதனின் கையிலிருக்கிறது. இயேசுக்கிறிஸ்துவை அவர் வாழ்ந்த காலத்தில் அவரை ஏற்றுக்கொள்ளாதவர்மேல் கடவுளின் கோபாக்கினை வந்தது ஏனென்றால் அவர்கள் அநீதியைத் தெரிந்து கொண்டார்கள். அவர்கள் கடவுளின் இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் கடவுள் இல்லாமல் வாழவிரும்பினார்கள் ஆதலால் கடவுள் அவர்களின் முடிவை ஏற்றுக்கொண்டார். கடவுள் அநீதியுள்வர் என்று நம்மால் சொல்ல முடியாது ஏனென்றால் அவர் அந்தத் தருணத்தை நமக்குத் தந்துள்ளார்.

பயமுறுத்துதலா அல்லது அன்பா.

“பாவம்” மற்றும் “நரகம்” என்ற வார்த்தைகளை வைத்து கிறிஸ்தவர்கள் பயமுறுத்துகிறார்கள் என்று பலர் சொல்லுகிறார்கள். கடவுள் என்னத்தைச் செய்யவேண்டும்? மனிதர்கள் நித்திய அழிவைநோக்கி போகிறதை அவர் பார்க்கவேண்டுமா? இதுதான் உண்மையான அன்பா? வேதம் அவருடைய நோக்கத்தை தெரியப்படுத்துகிறது: நான் நேசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களை கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன். ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்பு. (வெளி 3:19)  நரகத்தைக் காரணமாய் வைத்து நம்முடைய வாழ்க்கையைப்பற்றி நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

நீங்கள் சகல 12 பாடங்களையும் இலவசமாகப் PDFல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.

Ok